திருக்குறள்

1123.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை யிடம்.

திருக்குறள் 1123

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை யிடம்.

பொருள்:

நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.

மு.வரததாசனார் உரை:

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

சாலமன் பாப்பையா உரை:

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.